திங்கள், 18 ஜனவரி, 2010

நம்ம ஊரு சுத்தமாயில்ல!!!

இன்று செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு முக்கியமான செய்திகண்ணில் பட்டது. இந்த ஆண்டு பொங்கல் தினம் கடற்கரையில் சேர்ந்த குப்பைமட்டும் அறுபது டன்கள்!!!

"ஊரு முழுக்க அழுக்கு, ஊரெல்லாம் குப்பை" இப்படி சொல்லிக்கொண்டுஇருக்கும் நாம் நமது பங்கினை பற்றி சிந்திக்கிறோமா? நம் வீட்டின் குப்பையும்சரி, வெளியில் செல்லும்பொழுது சேரும் குப்பையும் சரி, எந்த வகையில்வெளியேற்றப்படுகிறது?

நம் வீட்டை அலங்கரிக்கும் நாம் நம்முடைய பொது இடங்கள் அசுத்தம்அடைவதை தடுக்க எதாகிலும் செய்திருக்கிறோமா? குறைந்தபட்சம் நாம் குப்பைபோடுவதையாவது நிறுத்திவிட்டோமா? இந்த ஊர் திருந்தாது, இந்த மக்கள்திருந்த மாட்டார்கள் என்று ஜம்பமாக பேசும் நாம், நாம் திருந்தி விட்டோமா என்றுஒரு முறையாவது சிந்தித்ததுண்டா? பல ஊடகங்களிலும் தூய்மை பற்றிபேசிக்கொண்டே இருக்கும்போதும் குப்பைகள் சேர்வதன் காரணம் என்ன? தனிமனித முயற்சி என்ன செய்து விட முடியும்?

ஒரு சிறிய சிந்தனை தோன்றியது.

நம்முடைய சமுதாயம் நம்மைப் போன்ற தனி மனிதர்களின் குழுமம். நாம்ஒவ்வொருவரும் நம்மை சுற்றி இருக்கும் சூழலை தூய்மையாய் வைத்திருக்கவேண்டும் என்பதை உருதுயாய் மேற்கொள்ளவேண்டிய சூழலில் உள்ளோம்.

நம்முடைய குப்பைகளை உரிய முறையில் வெளியேற்றும் கடமை உண்டுஎன்பதை நாம் உணர வேண்டும். நாம் நம்முடைய வீட்டை எவ்வளவுதூய்மையாய் பராமரிக்கிறோமோ அதே அளவு நம்முடைய சூழலும்இன்றியமையாதது. குப்பைகளை தொட்டியில் போடவேண்டும் என்றுவீட்டிலிருந்து வெளியே எடுத்துச்செல்லும் நாம் குப்பைத்தொட்டிக்கு அருகில்கொட்டிவிடுகிறோம். இனியாவது அதை மாற்றிக்கொள்வோம்.

நாம் வெளியில் செல்லும்போது குப்பைகளை கண்ட இடங்களிலும்போடும்போது நமக்கும் இதன் பாதிப்புகள் உண்டு என்பதை நினைவில்கொள்வோம். நாம் ஒருவர் நினைத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஆனால்நாம் ஒவ்வொருவரும் நினைத்தால் சாதிக்க முடியும். நம்முடைய சமுதாயத்தின்தூய்மை நம் கைகளில். உணர்வோம். இந்த சிற்றுரை ஒரு சிந்தனை பகிர்வுமட்டுமே. உங்கள் எண்ணங்களை தொடருங்கள். கருத்துப் பரிமாற்றம்நிகழட்டும்!!!