திங்கள், 29 ஜூலை, 2013

மழையில்!!!!

திறந்த வானம்,
மூடிய மேகம்,
நனைந்தது உடல்;
பூத்தது உள்ளம்!

மகிழ்ச்சியுடன் சேர்ந்து
சுவாசத்தின் நீட்சி!
முழுமையாய் இழுத்து
நுரையீரலில் நிறைத்துக்கொண்ட
மண்வாசனை!

சிரித்துக்கொண்டும் சிலிர்த்துக்கொண்டும்
நாட்டியமாடும்  பூக்கள்,
புதியதாய் இலைவிட்ட
சின்னச் செடிகள் !

விளையாடிக் களைத்த குழந்தையாய்
கலைந்து  கரைந்த கோலம்,
மீண்டும் குழந்தையாய் நான் !
மழையில்!!!