நடராஜமணி படைப்புகள்
செவ்வாய், 22 ஜூலை, 2014
மொட்டை மாடியில் ஒரு குட்டித்தூக்கம் !
தென்னை மர சாமரம் வீசி
தென்றல் எனும் போர்வை போர்த்தி
கண்ணிமை திறக்காமல்
கட்டிலில் கட்டிப்போட்டாள்
இயற்கைத்தாய்!!!
திங்கள், 21 ஜூலை, 2014
வாழ்வதற்காக!!!
பாடம் படித்தேன்;
பட்டம் பெற்றேன்;
பணம் தேடினேன்;
கனவு தொலைத்தேன்;
கவிதை தொலைத்தேன்;
சுயம் கவிழ்த்து,
சும்மா வாழ்கிறேன்!
புன்னகை மறந்தேன்;
புறையோடிப் போன
புண்களையும் புறக்கணித்தேன்;
காலம் மறந்தேன்;
காதல் துறந்தேன்!
கல்யாணம் செய்து கொண்டு
கடமையோடு குடித்தனம் செய்தேன்.
ஆரோக்கியம் தொலைத்து
அலுவல்களில் ஐக்கியமானேன்!
சம்பாதிக்கிறேன்,
வாழ்வதற்காக(?)!!!
ஞாயிறு, 6 ஜூலை, 2014
கண்ணம்மா என் காதலி
எவ்வளவு பறந்தாலும் ,
எங்கே போனாலும் ,
என்ன பேசினாலும் ,
யாரை சந்தித்தாலும் ,
கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று
என் நினைவுகளை உன்னோடு
கட்டி இழுக்கிறது !
என் நொடிகளில் நிறைந்தவளே ,
என்ன மாயம் செய்தாய் ???
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)