tag:blogger.com,1999:blog-86763674752917371732024-03-14T02:47:53.051+05:30நடராஜமணி படைப்புகள்சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-7914182933663814192023-11-03T12:17:00.001+05:302023-11-03T12:17:28.646+05:30மழை<p> முகமெல்லாம் பன்னீர்,</p><p>முன்னால் வாகனம்,</p><p>மழை!</p><p><br /></p><p><br /></p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-17481028062639851082023-02-08T20:12:00.000+05:302023-02-08T20:26:50.966+05:30நிதர்சனம்<p> எதிர்காலத்திற்கு இடம் அளித்து</p><p>இறந்து கொண்டிருக்கும் இறந்தகாலம்;</p><p>நிகழ்காலத்தில நிதர்சனம்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-36072354933726133232022-12-06T11:32:00.000+05:302022-12-06T12:41:45.520+05:30வாழ்க்கை<p>முகம் நிறைய புன்னகை;</p><p>முதுகு நிறைய புண்கள்!</p><p>வாழ்க்கை!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-58976942614699150172022-11-23T12:43:00.001+05:302022-12-06T12:41:45.520+05:30முத்தம்<p>இதழ்மேல் முத்தம்;</p><p>இசையாய் சிரித்திடும் வெட்கம்;</p><p>புல்லாங்குழல்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-37533169433136737592022-11-15T23:52:00.000+05:302022-12-06T12:41:45.520+05:30எனைத்தேடும் இரவுகள்<p> இரவிலிருந்து இரவு வரை</p><p>எனைத்தேடிக்கொண்டிருக்கிறேன்!</p><p>கண் மூடித் திறக்கும் முன்</p><p>காணாமல் போகிறேன்</p><p>நான்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-36922203351556695202022-03-08T11:47:00.003+05:302022-12-06T12:41:45.520+05:30பெண்மை<p> மென்மையல்ல பெண்மை! </p><p>வலிமையின் உருவம்!</p><p>உணர்வுகள் பொதிந்து </p><p>உயிர்களை சுமந்து </p><p>பொறுமையாய் கிடந்து </p><p>உலகை வழிப்படுத்தும் </p><p>வலிமையே பெண்மை!</p><p><br /></p><p>பூக்களைக் கடப்போம்!</p><p>புரவிகள் கொடுப்போம்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-23213633218470977072022-01-13T16:53:00.001+05:302022-12-06T12:41:45.520+05:30மூன்றாம் பிறை முத்தம்<p>பிரிய மனமில்லாமல்</p><p>பிரிந்தன இதழ்கள்,</p><p dir="ltr">
நெற்றியில் இருந்து!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-80775399487891458032021-12-31T20:46:00.002+05:302021-12-31T20:46:30.924+05:30சிகரெட்<p> மழையில் நனைத்து</p><p>பொறியில் பற்றவைத்து</p><p>புகைக்கும் சிகரெட் </p><p>ஸைலன்சர்!</p><p><br /></p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-889181794466649602021-12-29T15:50:00.000+05:302021-12-29T15:50:01.955+05:30தூக்கம் <p> இரவுகளை கடக்கிற போதுதான்</p><p>நேரம் வலிப்பதே இல்லை.</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-12298386360819660062021-10-10T14:44:00.000+05:302021-10-10T14:44:19.693+05:30மாலை மயக்கம்<p>மஞ்சள் வெய்யில்!</p><p>மழைச்சாரல்!</p><p>துளிகள் தங்கிய தலைக்கவசம்!</p><p>மயக்கம்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-57826684073530115342021-09-21T11:24:00.012+05:302021-09-21T11:25:40.211+05:30தேடல்<p> குச்சி தேடும் காகம்;</p><p>இரை தேடும் கழுகு;</p><p>கூட்டுக்குள் குஞ்சுகள்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-15327911027342537942021-08-23T07:39:00.000+05:302021-08-23T07:39:05.451+05:30திங்கட்கிழமை திருப்பள்ளியெழுச்சி<p> குளிர்ந்த காலை நேரம்</p><p>பச்சைக்கிளிகளின் பள்ளியெழுச்சி</p><p>தெளிவு கலந்த தூக்கம் </p><p>கண் விழித்ததும் என் </p><p>கண்ணுக்கினியாள்</p><p><br /></p><p>இப்படியாக மலர்ந்தது</p><p>இன்றைய காலை!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-7530397815208172712021-08-18T17:20:00.005+05:302021-08-18T17:20:39.813+05:30பல்லி<p> தளத்திற்கும் தரைக்குமிடையில் </p><p>நீளம் தாண்டுதல்;</p><p>பல்லி!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-67208068837138700192021-08-07T15:54:00.000+05:302021-08-07T15:54:35.901+05:30காவல்<p> நமக்கு வீடு காவல்!</p><p>வீட்டுக்கு கதவு காவல்!</p><p>கதவுக்கு பூட்டு காவல்!</p><p>பூட்டுக்கு சாவி காவல்!</p><p><br /></p><p>விரலினும் சிறிய சாவி</p><p>வீட்டிற்கே காவலென்றால்,</p><p>மனிதனின் மனத்திற்கு</p><p>காவலென்ன அறிகிலேனே!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-42751534898618046002021-08-05T10:45:00.004+05:302021-08-05T10:45:41.975+05:30கொசு<p>இரத்தம் குடிக்கும் ஆசையில்</p><p>வலைக்குள் வசிக்கும் கொசுக்கள்,</p><p>மனிதர்கள்!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-65438099559715061892021-07-29T22:26:00.000+05:302021-07-29T22:26:15.076+05:30கறை<p> நினைவுகளை கரைத்துக் கொண்டிருக்கிறேன்,</p><p>கறைகள் கனக்காமலிருக்க!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-50573628878960840942021-06-26T22:53:00.002+05:302021-06-26T22:53:26.205+05:30முழுமதி<p> முழுமதி!</p><p>ஊருக்கே வெளிச்சம் தரும் </p><p>ஒற்றை விளக்கு.</p><p>அழகாய் ஒளிர்ந்தது </p><p>அவளது கண்களில்.</p><p><br /></p><p>ஆம்.</p><p>நிலவைப்பார்த்து </p><p>நித்தம் மலரும் </p><p>சந்திரகாந்தி அவள்.</p><p><br /></p><p>நிலவின் ஒளியில் </p><p>நிறையும் முகத்தில்</p><p>மகிழ்ச்சி ததும்பும் </p><p>மழலை அரும்பும். </p><p><br /></p><p>குழலில் மறையும்</p><p>குழந்தை முகத்தில்</p><p>குறையேதும் இல்லாத </p><p>நிம்மதி நிறையும். </p><p><br /></p><p>மகிழ்ச்சி பரவும்</p><p>மட்டற்று வளரும்.</p><p>மனதின் வலிகள்</p><p>மறைந்தே போய் விடும்.</p><p><br /></p><p>காதல் நிறைத்து </p><p>கவிதை எழுதினால்</p><p>காகிதம் தீர்ந்தது</p><p>கண்கள் பனித்திடும். </p><p><br /></p><p><br /></p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-10818652109252504482021-06-10T09:56:00.005+05:302021-06-10T09:56:50.532+05:30விதை<p> பேசாமல் புதைத்த</p><p>வார்த்தை விதை </p><p>மௌனமரமாய்</p><p>வளர்ந்து நிற்கின்றது!</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-37688134251917948592021-06-09T22:35:00.000+05:302021-06-09T22:35:21.136+05:30அக்கரை (றை)<p> இக்கரைக்கு அக்கரை பச்சை.</p><p>அக்கரை இக்கரை ஆனபின்</p><p>இக்கரை அக்கரை ஆகிடும்.</p><p>அக்கரை ஆன இக்கரை மேல்</p><p>அக்கறை வருமா?</p>சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-14467300004872485652020-07-12T07:25:00.000+05:302020-07-12T07:32:35.428+05:30காத்திருப்பின் தூரம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இரவு நேரம்.<br />
சுவாசத்தின் சத்தம் மட்டுமே துணை.<br />
காத்திருப்பின் தூரம்<br />
கண்ணாடி சுவர் மட்டும்.<br />
உள்ளே நானும்<br />
வெளியே சென்னையும்.<br />
<br />
மடி தேடும் மழலையாய் நான்.<br />
<br />
<br /></div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-59926630499147341872020-07-06T01:26:00.000+05:302020-07-06T01:26:12.478+05:30சூரிய விளக்கு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சூடேறி சூடேற்றி<br />
வெளிச்சம் மேலேற்றி<br />
வெம்மை வடித்து<br />
வெளிச்சம் குறைத்த<br />
சோடியம் விளக்கு,<br />
<br />
சூரியன்.<br />
<br /></div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-32709228109885092972020-06-26T22:26:00.000+05:302020-06-26T22:26:24.313+05:30என்னோடு மோதும் நான் - முரண் 1<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதல் வார்த்தை எழுத<br />
முட்டி மோதுகின்றேன்.<br />
<br />
எதை எழுத?<br />
<br />
எண்ண(ற்ற) அலைகள்<br />
சொற்சுவர் கரை உடைத்து<br />
வழிந்து வெளிவருகின்றன;<br />
வடிவம் தொலைத்துவிட்டு.<br />
<br />
திறந்து திறந்து<br />
மூடி மூடி<br />
தடம் பதித்து சிரிக்கிறது<br />
எழுதுகோலின் மூடி.<br />
<br />
சின்னஞ்சிறு வயதில்<br />
நல்லறம் கற்றுத்தந்து<br />
வளர்ந்தபின் மறக்கச்சொல்கிறது<br />
சாமர்த்திய சமூகம்.<br />
<br />
மனசும் அறிவும் வேறாம்.<br />
மனசாட்சி மறுக்கும் செயலை<br />
அறிவு ஏற்கவேண்டும்.<br />
<br />
முன்னேறிப்போக<br />
மற்றவன் முதுகில் ஏறினால்<br />
அறிவாளி.<br />
ஏறிவிட்டு ஏற்றிவிட்டால்<br />
ஏமாளி.<br />
எட்டி உதைத்தால்<br />
அவன்தான் மேதாவி.<br />
<br />
எல்லாரும் சமம்<br />
என்றுதான் சொன்னார்கள்.<br />
பழகும்போது பார்வைகள்<br />
பகட்டை மட்டுமே எடை போடுகின்றன.<br />
<br />
பள்ளிப்படிப்பு<br />
அறிவளிக்கும் என்றார்கள்.<br />
படித்து முடித்தபின்<br />
எல்லாம் பழையதாகிவிட்டது.<br />
<br />
வேலைவரம் பெற<br />
பள்ளிப்படிப்பு பன்னிரண்டாண்டு.<br />
பெற்றவர் மனங்குளிரும்<br />
கல்லூரி மூன்றாண்டு.<br />
மேலதிக வரம்பெற<br />
மற்றுமொரு ஈராண்டு.<br />
<br />
பதினேழு ஆண்டுகள் தவமிருந்து<br />
பனிசேர்ந்தால்,<br />
பயிற்சிக்காலம்<br />
ஓராண்டு.<br />
<br />
படிப்பிற்கு பணியென்றால்<br />
பொறியாளனுக்கு ஏன் பிபிஓ?<br />
பயின்று பணியாற்றிவிட்டால்<br />
படிக்க ஏன் பதினேழு ஆண்டுகள்?<br />
<br />
பணம் சம்பாதித்தால்<br />
மகிழ்ச்சியாக வாழலாம்.<br />
நான் சரியாகத்தான் எழுதுகிறேனா?<br />
சிரித்தபடி என்னை கடந்துசெல்லும்<br />
பிச்சைக்காரர்.<br />
<br />
புன்னகை<br />
தோழமையின் முகவிலாசம்.<br />
தோழமை<br />
பிரதிபலன் இல்லா<br />
அன்பின் அடையாளம்.<br />
நிச்சயமாகவா?<br />
<br />
தோளில் கைபோட்ட தோழன்<br />
தட்டிக்கொடுப்பதாய் நினைத்தால்<br />
தோளில் ஊன்றி மேலேறி<br />
கீழிழுத்துக் கால் மிதித்து<br />
மேலேறிச் செல்கிறான்.<br />
<br />
விட்டுக்கொடுப்பவர்<br />
கெட்டுப்போனதில்லை.<br />
ஆம்.கெடுவதற்கு ஒன்றுமே இல்லை.<br />
<br />
பணம் வாழ்வின் சக்கரமாய்.<br />
அதுவோ,<br />
வாழ்வை நகர்த்தும் தேரோட்டியாய்.<br />
<br />
சுயநலம் தவறானது.<br />
பாம்பு தின்னும் ஊரில்<br />
நடுக்கறி எனக்கு.<br />
எது சரி?<br />
<br />
தொடர்ந்து மோதுவோம்!</div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-80831476630749926432020-06-26T21:22:00.000+05:302020-06-26T21:22:00.833+05:30மீண்டெழும் ஒரு கவிஞனின் மறுபயணம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு கவிதை முயற்சி.<br />
<br />
நான் வாழ்வில்<br />
<br />
கடந்த<br />
சந்தித்த<br />
அதிர்ந்த<br />
பயந்த<br />
சிரித்த<br />
<br />
முரண்களை பேனா போனபோக்கில் எழுதும் ஒரு எத்தனிப்பு.<br />
தொடர்களாய் எழுதும் முயற்சி.<br />
<br />
என்னோடு மோதும் நான்.<br />
<br />
<br /></div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-74406363014909602502017-03-10T03:36:00.001+05:302017-03-10T03:36:37.245+05:30காதல் கடல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கரையின் காதுகளில் <div>
கடல் பேசும் காதல் மொழி,</div>
<div>
அலை!</div>
</div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8676367475291737173.post-87491726693372707912016-12-12T04:05:00.000+05:302016-12-12T04:05:17.252+05:30கடற்கரையோரம்!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
கடற்கரையோரம்!<div>
காய்ந்த மணலின் கரையோரம்!</div>
<div>
இதயம், இதமாக சிறகுகளை விரித்தது!</div>
<div>
அலைகள் குதித்தோடி வந்தது கண்டு </div>
<div>
அனிச்சையாய் உதடு பிரிந்தது!</div>
<div>
<br /></div>
<div>
காற்று வந்து ஸ்பரிசித்த தேகம்,</div>
<div>
குளிரை உள்ளுக்குள் இழுத்து அனுபவித்தது!</div>
<div>
<br /></div>
<div>
காணாமல் போன கவிதைகள் </div>
<div>
எழுதுகோல் படைத்த </div>
<div>
எழுத்தோவியமாய்!</div>
<div>
என்னுள் இன்று!</div>
<div>
<br /></div>
<div>
மனசு திறந்த இரவு!</div>
<div>
மணல் மீது கனவு!</div>
<div>
சுதந்திரமாய் ஒரு கிறக்கம்!</div>
<div>
சுகமான உறக்கம்!</div>
<div>
<br /></div>
<div>
இந்த இரவு போல் </div>
<div>
இன்னும் இன்னும் வேண்டும்!</div>
<div>
<br /></div>
<div>
கடற்கரையோரம்!</div>
<div>
காய்ந்த மணலின் கரையோரம்!</div>
</div>
சிந்தனைகளின் குழந்தை நான்!http://www.blogger.com/profile/11522795977087747475noreply@blogger.com0