உறங்குதல் போலும் சாக்காடு
செல்போன் அடித்ததும் விழிப்பது
பிழைப்பு!
காதுகள் முழுக்க சத்தம்!
ரயில் முழுக்க அமைதி!
டிஜிட்டல்!
மாலை ரயில்;
கசக்கிப் பிழிந்து எடுக்கும் கூட்டம்!
உருகும் இரு கண்கள்; அதை
பருகும் இரு கண்கள்!
ஓங்கி நிற்கிறது
பத்தடி சுவர்;
கவலையே இல்லாமல்
அநாயாசமாய் தாவுகிறது
அழகானதோர் பச்சைக் கொடி!
மேகம் மறைந்த தெளிந்த வானம்;
நகரும் ஓவியம்,
கழுகு!
பசுமையின் நம்பிக்கையுடன்
கோடைக்குள் நுழைகிறது
காய்ந்த மரம்!