செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

இருள்

இரவுகளை ரசித்ததுண்டா?
இருளை ரசித்ததுண்டா?
உன்னைச் சுற்றி உலகமே இருந்தாலும்
உனக்கென்ற தனி உலகம்
உருவாவதை உணர்ந்ததுண்டா?

உன் உலகத்தில் நீ நீயாக
சுதந்திரமாய் பறந்து
புதுசாய் சுவாசித்ததுண்டா?

உன்னை உன் உண்மையை
உனக்கே வெளிப்படுத்திய
கண்ணாடியை பார்த்ததுண்டா?

இருள் பயமல்ல!
இருள் பாவமல்ல!
இருள் பாக்கியம்!

இருளை ரசித்துப்பார்!
அது உனக்குள்
புது வெளிச்சம் போடும்!