வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

நட்புக்கு நன்றி!

இதுவரை நான் எவ்வளவோ இந்த வலைப்பூவில் தொடர்ந்து எழுதி வருகிறேன். என்றாலும் கூட, ஒரு பதிவிற்கு மட்டும் வாசகர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
அது "உனக்காக ஒரு கவிதை".

என் தோழியின் வீட்டிற்கு எதேச்சையாய் சென்றபொழுது அவர் வீட்டு மொட்டை மாடியில் மனசு முழுக்க எங்கள் சிறிய வயது நாட்களையும், எங்கள் மனம் திறந்த பேச்சுக்களையும் அசைபோட்டுக்கொண்டு இருந்தேன். அப்போது என்னையும் அறியாமல் தோன்றியது இந்த கவிதை. ரஷிய கவிஞன் ருமாஸ் கம்சதோவ் சொன்னது போல், வார்த்தைகள் தாமாக வந்து பேனா முனையில் வழுக்கி காகிதத்தில் நடனமாடின. மனசு லேசாக இருந்தது. அதனாலோ என்னவோ கவிதை இரண்டு நிமிடத்தில் முடிந்து விட்டது. அதற்கு மேல் எழுத முடிய வில்லை. எங்கள் நட்பு இன்று நாங்கள் உலகின் இரு மூலைகளில் இருந்தாலும், எப்பொழுதாவது அத்தி பூத்தாற்போல் பேசினாலும் மனசு முழுவதும் மகிழ்ச்சியை நிரப்பி விடுகிறது.

தோழி! நன்றி!

உன் நட்பிற்கும், நட்பால் மலர்ந்த வாடாமலராய் நிற்கும் கவிதைக்கும்!