புதன், 2 செப்டம்பர், 2009

கன்னித் தந்தை

திருமணம் ஆகவில்லை,
எந்தப் பெண்ணையும் தீண்டவில்லை,
ஆனாலும் இன்று தந்தை!
தமிழைப் போலவே,
அழுகையும் ஆனந்தம் தந்தது!
பாபிலோனில் மட்டுமா தொங்கும் தோட்டம்?
இங்கு தொட்டிலிலும்தான்!
இவள் பாதங்களே அனிச்சமலரோ?
இந்த இதழ்கள் தான் ரோஜா மொட்டுகளோ?
கண்களில் தான் சின்ன குழப்பம்;
காந்தள் என்பதா? அல்லி என்பதா?
துவாலையைவிட மென்மையாய்
பூக்குடலை போல் உடல்!
கைகளில் அள்ளிக்கொண்டேன்;
பூமாலையா? பூந்தோட்டமா?
புரியாமலே புன்னகைத்தேன்!