வெள்ளி, 12 டிசம்பர், 2008

பொருளில்லா பொருட்கள்!

நாம் நம்முடைய வாழ்வில் நித்தம் நித்தம் எத்தனையோ செயல்களை செய்கிறோம். அவை அனைத்தும் சரியனவி என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையிலேயே அவை சரியானவையா? எது சரி? எது தவறு?

நமக்கு சரி என்று தோன்றும் ஒரு செயல் மற்றொருவருக்கு தவறாகவே படுகிறது. எடுத்துக்காட்டாக, நம்முடைய பழக்கவழக்கங்கள் நமக்கு சரி என்று பட்டாலும், மேற்கத்திய நாடுகளில் அது ஒரு முட்டாள் தனமாக கருதப்படுகிறது. அவர்கள் செய்யும் எத்தனையோ செயல்கள் நமக்கு தவறாக தெரிகிறது. அவ்வளவு ஏன் நம்மை விட பெரியவர்களுக்கும் நமக்குமே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது!

இப்படிப்பட்ட சூழலில் நாம் நினைப்பதும் நான் செய்வதும் சரி என்பதும் மற்றவர்கள் செய்வது தவறு என்பதும் சற்றே சிந்தித்துப்பார்க்க வேண்டிய கருத்தாகவே இருக்கிறது. நம்முடைய செயல்கள் பிறரை பாதிக்காத வரையில் எல்லாமே சரி என்ற கருதும் சில நேரங்களில் ஏற்க முடியாததாகவே உள்ளது. காரணம், இன்றைய சூழலில் நம்முடைய செயல்கள் ஏதோ ஒரு விதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ இன்னொருவரை பாதிக்கிறது. இது தவிர்க்க முடியாதது. அப்படிப்பட்ட சூழலில் நம்மில் ஒருவரும் சரியானவர் இல்லை. பேருந்தில் ஓடிப்போய் வேகமாக ஏறி இடம் பிடிக்கும்போது ஓட முடியாத மோசமான உடல்நிலையில் இருக்கும் ஒருவரின் இடத்தை நாம் பிடுங்கி விடுகிறோம். அப்படிப்பட்ட சூழலில் நம்முடைய செயல்கள் யாரையும் பாதிப்பதில்லை என்று எப்படி கூற முடியும்?

நம்முடைய வழ்கியாயின் ஒவ்வொரு நொடியிலும் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது. எந்த மொழியாக இருந்தாலும் அது பொருளில்லாத சொற்களை உடையதாக இருப்பதில்லை. இருக்கவும் முடியாது. ஆனால் அந்த சொற்களையும் பொருட்களையும் நாமே உருவாக்குகிறோம். அப்படி இருக்கையில் எந்த ஒரு சொல்லையோ செயலையோ சரி என்றோ தவறு என்றோ நாம் எப்படி முடிவு செய்ய முடியும்?

ஒருவேளை நம் வாழ்வின் ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பொருள் தருவது நாம்தான் என்றால் அந்த சொற்கள் நமக்கு கட்டுப்பட்டிருக்கவேண்டுமே தவிர நாம் அதற்க்கு கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதுவே நிதர்சனம்.

பொருள் என்பது பொருளாக கொள்ளப்படவேண்டுமே தவிர அவை நிலையானவை அல்ல என்பதை உணர்வோமாக.

கருத்துகள் இல்லை: