திங்கள், 12 டிசம்பர், 2016

கடற்கரையோரம்!!!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!
இதயம், இதமாக சிறகுகளை விரித்தது!
அலைகள் குதித்தோடி வந்தது கண்டு 
அனிச்சையாய் உதடு பிரிந்தது!

காற்று வந்து ஸ்பரிசித்த தேகம்,
குளிரை உள்ளுக்குள் இழுத்து அனுபவித்தது!

காணாமல் போன கவிதைகள் 
எழுதுகோல் படைத்த 
எழுத்தோவியமாய்!
என்னுள் இன்று!

மனசு திறந்த இரவு!
மணல் மீது கனவு!
சுதந்திரமாய் ஒரு கிறக்கம்!
சுகமான உறக்கம்!

இந்த இரவு போல் 
இன்னும் இன்னும் வேண்டும்!

கடற்கரையோரம்!
காய்ந்த மணலின் கரையோரம்!

கருத்துகள் இல்லை: