மாலை ரயில்;
கசக்கிப் பிழிந்து எடுக்கும் கூட்டம்!
உருகும் இரு கண்கள்; அதை
பருகும் இரு கண்கள்!
ஓங்கி நிற்கிறது
பத்தடி சுவர்;
கவலையே இல்லாமல்
அநாயாசமாய் தாவுகிறது
அழகானதோர் பச்சைக் கொடி!
மேகம் மறைந்த தெளிந்த வானம்;
நகரும் ஓவியம்,
கழுகு!
பசுமையின் நம்பிக்கையுடன்
கோடைக்குள் நுழைகிறது
காய்ந்த மரம்!
கடற்கரை ஞாயிறு நடை
அவள் நடக்க பாதத்தில் முத்தம்!
அடுத்தவர் முத்தம் தடுக்க
அவசரமாய் காலை
காலை மணலில் புதைத்தது,
அலை!