ஓங்கி நிற்கிறது
பத்தடி சுவர்;
கவலையே இல்லாமல்
அநாயாசமாய் தாவுகிறது
அழகானதோர் பச்சைக் கொடி!
மேகம் மறைந்த தெளிந்த வானம்;
நகரும் ஓவியம்,
கழுகு!